பதிவு செய்த நாள்
20
ஏப்
2018
02:04
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அவிநாசியிலுள்ள, பிரசித்தி பெற்ற கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத்தேர்த்திருவிழா, கொடியேற்றம் இன்று நடக்கிறது. இன்று காலை, 8:00க்கு, கோவில் கொடி மரத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி சிறப்பு பூஜை செய்யப்பட்டு, சுவாமி புறப்பாடு நடக்கிறது. இன்று இரவு, திருமுருகன்பூண்டியில் இருந்து, திருமுருகநாதசுவாமி வருகை நிகழ்ச்சி, அவிநாசிலிங்கம்பாளையத்தில் நடக்கிறது. திருவிழாவின், முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, அறுபத்து மூவர் திருவிழா, வரும், 24ம் தேதி இரவு, 7:00 மணி முதல் துவங்கி நடக்கிறது. பெரிய தேரோட்டம், 27ம் தேதியும், அம்மன் தேரோட்டம், 28ம் தேதியும் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்திலுள்ள ஸ்ரீ கருணாம்பிகை கலையரங்கில், தினமும் இரவு, 7:00 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.