பதிவு செய்த நாள்
20
ஏப்
2018
02:04
திண்டிவனம்: தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோவில், பிரம்மோற்சவ விழா நேற்று துவங்கியது. திண்டிவனம் அடுத்த தீவனூரில் பொய்யாமொழி விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, காலை 7:30 மணிக்கு, கணபதி ஹோமமும், சுவாமி மாடவீதியுலாவும் நடந்தது. இதையடுத்து இன்று (20ம் தேதி) முதல் 24ம் தேதி வரை இரவு சுவாமி மாடவீதியுலா நடக்கிறது. மேலும், 25ம் தேதி காலை 11:00 மணிக்கு 1008 பால்குட அபிஷேகமும், 26ம் தேதி பொய்யாமொழி விநாயக பெருமானுக்கு திருப்பூநூல் கல்யாணமும் நடக்கிறது. தொடர்ந்து 27 ம் தேதி காலை 9:00 மணிக்கு திருத்தேர் விழாவும், 28ம் தேதி மாலை 4:00 மணிக்கு, புனித தீர்த்த குளத்தில் தீர்த்தவாரியும், 29ம் தேதி இரவு 12 மணிக்கு முத்து பல்லக்கு நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் சகுந்தலா அம்மாள், அதிகாரம் பெற்ற முகவர் மணிகண்டன் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.