நாடி என்ற சொல்லுக்கு காலஅளவு என்று பொருள். இந்த நாழிகையில் இந்த மாதிரியான கிரக அமைப்புகள் இருந்தால் இன்னின்ன நிகழ்வுகள் என்பதை தமது தவவலிமையால் வசிஷ்டர், அகத்தியர் போன்ற முனிவர்கள் நாடிஜோதிடத்தை எழுதி வைத்துள்ளனர். மனிதவாழ்வு மட்டுமின்றி இயற்கைநிகழ்வுகளான மழை, புயல், அமாவாசை, பவுர்ணமி, சூரியசந்திர கிரகணம் பற்றிய குறிப்புகளும் அதில் இடம்பெற்றுள்ளன. அதனால் நாடிஜோதிடம் உண்மையே. கஷ்டநிவர்த்திக்காக பரிகாரம் செய்வதும் சரியே. ஆனால், ஜோதிடர் நம்பகம் உள்ளவராக இருப்பது மிகமிகஅவசியம். ஒருசிலரின் தவறான போக்கால் ஜோதிடம் மூடநம்பிக்கையாகி விடுகிறது.