ஒரு தெய்வத்துக்கு, ஒரு உற்ஸவர் சிலை மட்டுமே கோயில்களில் இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோயிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்ஸவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு. குமரவிடங்கரை, “மாப்பிள்ளை சுவாமி” என அழைக்கின்றனர்.