Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏழுமலையான் தரிசனம் : 25 மணி நேரம் ... கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவில் தேர் திருவிழா கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐம்பொன் சிலைகளில் மோசடி: பழநி கோயிலில் விடிய விடிய ஆய்வு
எழுத்தின் அளவு:
ஐம்பொன் சிலைகளில் மோசடி: பழநி கோயிலில் விடிய விடிய ஆய்வு

பதிவு செய்த நாள்

14 மே
2018
11:05

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் ஐம்பொன் சிச்லை மோசடி வழக்கு தொடர்பாக இரண்டு நாட்களாக ஆய்வு நடந்தது. சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தலைமையில் சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் ஆய்வு செய்தனர்.

பழநி முருகன் கோயில் நவபாஷாண சிலைக்கு முன்னால் வைப்பதற்காக 2004ல் 200 கிலோ எடையில் ஐம்பொன்சிலை செய்யப்பட்டது. இதில் தங்கம் சேர்க்காமல் மோசடி செய்ததாக அப்போதைய இணை ஆணையர் கே.கே.ராஜா, தலைமை ஸ்தபதி முத்தையா கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு சிலை கடத்தல் தடுப்புபிரிவில் இருந்து சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் மீண்டும் விசாரிக்கிறார். இந்நிலையில் பொன்.மாணிக்கவேல், கூடுதல் எஸ்.பி., ராஜாராம், டி.எஸ்.பி., கருணாகரன் குழுவினர்  பழநிக்கு நேற்று முன்தினம் வந்தனர். அவர்களுடன் ஐ.ஐ.டி., உலோகவியல் துறை பேராசிரியர் முருகையா குழுவினர் இருநாட்களாக ஆய்வு செய்தனர்.

நேற்று முன்தினம் இரவில் துவங்கி விடிய விடிய ஆய்வு நடந்தது. மலைக்கோயிலில் ‘டபுள் லாக்கரில்’ உள்ள ஐம்பொன்சிலை மற்றும் சின்னக்குமாரசுவாமி, சண்முகர், வள்ளி, தெய்வானை, நவவீரர்கள், கன்னிமார்கள் மற்றும் பெரியநாயகியம்மன் கோயில் நடராஜர், முத்துக்குமாரசுவாமி, வாகனங்கள் வைப்பறையில் உள்ள உற்ஸவர் சிலைகளை ஆய்வு செய்தனர். மலைக்கோயிலில் நவவீரர்கள் சன்னதியில் இரண்டு சிலைகளுக்குரிய பீடம்,  சிலையை விட பல மடங்கு பெரிதாக இருந்தது. ‘கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அப்படிதான் உள்ளது’ என அதிகாரிகள் கூறியுள்ளனர். உற்ஸவர் சின்னக்குமாரர் சிலை சேதம் குறித்தும் ஆய்வு நடந்தது. இந்த ஆய்வுக்கு பின் குருக்கள், அலுவலர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை மாத பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி ... மேலும்
 
temple news
பொன்னேரி; பொன்னேரி, திருவாயற்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் மற்றும் பாஷ்யகார ஸ்வாமி கோவில் உள்ளது. கடந்த, ... மேலும்
 
temple news
திருநீர்மலை; பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், பிரசித்திபெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar