கொடைக்கானல் : கொடைக்கானல் குறிஞ்சியாண்டவருக்கு ஓட்டல் கோடை இன்டர்நேஷனல் சார்பில் மலர் வழிபாட்டு விழா நடந்தது. ஆண்டுதோறும் மே மாதத்தில் குறிஞ்சியாண்டவருக்கு மலர் வழிபாடு நடத்துவது வழக்கம். நேற்று அனைத்து வகையான மலர்களால் குறிஞ்சியாண்டவர் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தது. பழநி தண்டாயுதபாணி கோயில் இணை ஆணையர் செல்வராஜ்,. கோடை ஓட்டலின் மேனேஜிங் இயக்குனர் பாண்டுரங்கன், செயல் இயக்குனர் தங்கவேல் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.