வாடிப்பட்டி, வாடிப்பட்டி அருகே தர்மராஜன்கோட்டை பாலதண்டாயுதபாணி கோயில் வைகாசி விசாகத் திருவிழா மே 15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 28ல் பால்குடம், அலகு குத்தி பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. மே 29ல் பட்டுப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளினார். நேற்று முன்தினம் இரவு பூப்பல்லக்கில் முக்கிய வீதிகளில் சுவாமி வீதி உலா வந்தார்.