பதிவு செய்த நாள்
14
ஜூன்
2018
11:06
ராமேஸ்வரம், வைகாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள். தமிழகத்தின் பல பகுதியில் இருந்து நேற்று ஏராளமான பக்தர்கள், ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர்.
பக்தர்கள், முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் அக்னி தீர்த்த கடற்கரையில் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். பின் பக்தர்கள் சிவசிவ என கோஷமிட்டபடி அக்னி தீர்த்த கடலில் மூழ்கி புனித நீராடினார்கள். பின் கோயிலுக்குள் 22 தீர்த்தங்களை நீராட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். பின் கோயிலுக்குள் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். நேற்றைய அமாவாசைக்கு ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், போலீசார் பற்றாக்குறையில் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர்.