பாதாளகாளி மற்றும் பிரத்தியங்கராதேவி கோவிலில் நிகும்பலா யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2018 11:06
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு நரியன்ஓடை கரையில் உள்ள பாதாளகாளி மற்றும் பிரத்தியங்கராதேவி கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடந்தது. யாகத்தையொட்டி, நேற்று மதியம் 12:00 மணிக்கு சிறப்பு யாக வேள்விகள் நடந்தது. 1:00 மணிக்கு யாகத்தில் மிளகாய் வற்றல்களை கொட்டப்பட்டு நிகும்பலாயாகமும், தொடர்ந்து கலச பூஜையும் நடந்தது. தொடர்ந்து பாதாளகாளிக்கு சிறப்பு பூஜையும், 2:00 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. பூஜையில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.