Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெல்லையப்பர் கோயிலில் பத்ர தீப விழா: ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரிகார தலங்களாக மாறும் கோவில்கள் கோவை ஆதினம் வேதனை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2012
10:01

கரூர்: ""ஆன்மிகம் சிலரால் திசை திருப்பப்பட்டு, பரிகார தலங்களாக கோவில்கள் மாற்றப்படுகிறது என கோவை காமாட்சிபுரி ஆதினம் பேசினார். கரூர் பொது சமய சன்மார்க்க சங்கம் 61ம் ஆண்டு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவை காமாட்சிபுரி ஆதினம் பேசியதாவது: ஆன்மிகம் சிலரால் திசை திருப்பப்பட்டு, பரிகார மையங்களாக கோவில்கள் மாற்றப்படுகிறது. விளக்கு போடுகிறோம் என்ற பெயரில், அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அல்லாமல் கோவில் முழுவதும் விளக்கேற்றுகின்றனர். சுவர்களிலும், தூண்களிலும் எண்ணையை அப்பி பாழாக்குகின்றனர். பழங்கள், பூசணி, தேங்காய் மூடிகளை படையலிட்டு பசியால் வாடுபவனுக்கு கொடுக்க வேண்டுமே தவிர விளக்கு போடவும், பிழிந்து வீணாக்கவும் கூடாது. பழம் பிழியும் மெஷினாக மூல விக்ரகங்கள் ஆக்கப்படுவது தவறு. சிவனே முதன்மையான தெய்வம். "நமசிவாய என்ற ஐந்து எழுத்து மந்திரமே அனைத்துக்கும் தீர்வு. திருநள்ளாறு தீர்த்தக்குளம் கிழிந்த உள்ளாடைகளால் நிரப்புவது தவறு. ஒருவர் இறந்தால், சிவம் ஆகிறார் என்கிற நாம், சவம் என்று கோவில் முழுவதும் கழுவி விடுவது மூடப்பழக்கம். நன்கு வாழ்ந்தவர் இறந்தால், "அடைப்பு என்று கூறி வீட்டை பூட்டுவது முட்டாள்தனம். சிரிப்பும், அழுகையும் கலந்ததே வாழ்வு. அதில் தாய், தந்தையே முதல் வணக்கத்துகுரியவர்கள். இல்லாத பசித்தவனுக்கு கொடுப்பதே அன்னதானம்.
வேகமான உலகில் ஒப்பந்த முறையில் மேலை நாடுகளில் நடக்கும் திருமண முறை வந்துவிடுமோ என அச்சம் எழுகிறது. இவ்வாறு அவர் பேசினார். சங்கத்தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். சின்னப்பன், கண்ணன், சுப.லட்சுமணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar