பதிவு செய்த நாள்
27
ஜூலை
2018
02:07
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த, பண்ணாரிஅம்மன் கோவிலில், மாதம் ஒருமுறை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். நேற்று, இந்துசமய அறநிலையத்துறை திருப்பூர் உதவி ஆணையர் ஹர்சினி, பண்ணாரிஅம்மன் கோவில் துணை ஆணையர் பழனிக்குமார் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலையில், 20 உண்டியல்கள் திறக்கப்பட்டன. மேலாளர் கபீர்தாஸ், வங்கி ஊழியர்கள், கோவில் பணியாளர்கள், சத்தியமங்கலம் தனியார் கல்லூரி மாணவ மாணவியர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியல்களில், 55 லட்சத்து, 71 ஆயிரத்து, 772 ரூபாய், 385 கிராம் தங்கம், 749 கிராம் வெள்ளி இருந்ததாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.