பழநியில் பெரியநாயகி அம்மன் கோயிலில் லட்சார்ச்சனை யாகபூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2018 11:08
பழநி : ஆடிக்கடைசி வெள்ளியை முன்னிட்டு, பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் லட்சார்ச்சனை யாகபூஜையும், இரவு வெள்ளித் தேரோட்டம் நடந்தது. தைப்பூசவிழா நடைபெறும், பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனைவிழா ஜூலை 17ல் துவங்கி ஆகஸ்ட் 10 வரை நடந்தது. தினமும் மாலையில் அம்மனுக்கு நுாறாயிரம் மலர்களால் லட்சார்ச்சனை நடந்தது. நேற்று காலை லட்சார்ச்சனைபூர்த்தி யாகபூஜையில் புனிதநீர் நிரம்பிய கலசங்கள் வைத்து, கணபதி ஹோமம், 1008 சகஸ்கர நாம வழிபாடு, சுமங்கலி பூஜை நடந்தது.
தேரோட்டம்: விழாவின் முக்கியநிகழ்வாக நேற்றிரவு பெரியநாயகியம்மனுக்கு தங்கக்கவசம் அலங்காரம் செய்து, கஸ்துாரி யானை முன்செல்ல, நான்கு ரதவீதிகளிலும் ளித்தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இணைஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ) செந்தில்குமார் செய்தனர்.