திருப்பரங்குன்றம் : உலக நன்மை, பெண்களுக்கு வரன் அமையமற்றும் மழை வேண்டி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 1008 விளக்கு பூஜைநடந்தது. திருவாட்சி மண்டபத்தில் மூன்றரை அடி உயர வெள்ளி விளக்கு, கம்பத்தடி, மடப்பள்ளி, ஆஸ்தான மண்டபம்,உற்ஸவர் சன்னதியில் மூன்றரை அடி உயர பித்தளை விளக்குகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. சிவாச்சாரியார்கள் தீபம் ஏற்றி பூஜை செய்தனர். தீபாராதனை முடிந்து பிரசாதம் வழங்கப்பட்டது.