Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஜோதி தரிசனம்: திரளானோர் பங்கேற்பு சொரப்பூர் முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி 4வது வெள்ளி: திருவிளக்கு பூஜையில் திரளானோர் தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2018
03:08

ஆத்தூர்: ஆடி நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, சேலம் மாவட்டத்திலுள்ள அம்மன் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது. சேலம் மாவட்டம், ஆத்தூர், பெரியமாரியம்மன் கோவிலில், சிறப்பு அபி ?ஷகம், பூஜை நடந்தது. புஷ்ப அலங்காரத்தில், அம்மன் அருள்பாலித்தார். அதேபோல், கைலாசநாதர் கோவிலில் உள்ள காமாட்சி அம்மன், வெள்ளி கவச அலங்காரத்தில் காட்சியளித்தார். கோட்டை, சம்போடை வனம், மதுரகாளியம்மன், காயநிர்மலேஸ்வரர், வெள்ளை விநாயகர், வடசென்னிமலை பாலசுப்ரமணியர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர்.

* ஏத்தாப்பூர் வசிஷ்ட நதிக்கரையிலுள்ள, சமயபுரம் மாரியம்மன் கோவிலில், சிறப்பு பூஜைக்கு பின், அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில், அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெத்தநாயக்கன்பாளையம், லட்சுமி நரசிம்மர் கோவிலில், திருவிளக்கு பூஜை நடந்தது. அதேபோல், வாழப்பாடி வட பத்திரகாளியம்மன், திரவுபதியம்மன், செல்லியம்மன், புதுப்பட்டி மாரியம்மன் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது.

* சங்ககிரி, சந்தைப்பேட்டை செல்லியாண்டியம்மன், வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன் கோவில்களில், மக்கள் நலன் பெற வேண்டி, திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. 500க்கும் மேற்பட்ட பெண்கள், குத்து விளக்கேற்றி, பச்சை வாழை இலையில், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்கள் வைத்து, சுவாமியை தரிசித்து, தாலிக் கயிறுக்கு பொட்டுவைத்து வழிபட்டனர்.

* ஆன்மிக நற்பணி குழு சார்பில், ஓமலூர், கோட்டை மாரியம்மன் கோவிலில், 13ம் ஆண்டாக, அஷ்டமஹாலட்சுமி ?ஹாமம் நடந்தது. தொடர்ந்து, 1,008 திருவிளக்கு மாங்கல்ய பூஜை நடந்தது. அதில், உற்சவர் அம்மனுக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar