திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2026 08:04
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. தேவார பாடல் பெற்ற இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. அதனை முன்னிட்டு தேரில் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு தருமபுரம் ஆதீனம் கட்டளை விசாரணை சிவகுருநாத தம்பிரான் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார் தொடர்ந்து பூம்புகார் தொகுதி எம்எல்ஏ நிவேதா எம் முருகன், அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேர் நான்கு வீதிகளையும் வலம் வந்தது. தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் மணி உள்துறை விருதகிரி ஆகியோர் செய்திருந்தனர்.