Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எருமைகளை பலி கொடுத்து சிவகங்கையில் ... விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக சிலைகள் செய்யும் பணிகள் ஜரூர் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விதை விநாயகர் சிலைகள் தயாரிப்பு: இப்படியும் காக்கலாம் இயற்கையை!
எழுத்தின் அளவு:
விதை விநாயகர் சிலைகள் தயாரிப்பு: இப்படியும் காக்கலாம் இயற்கையை!

பதிவு செய்த நாள்

24 ஆக
2018
12:08

திருப்பூர் : இயற்கையை பாதுகாக்கும் வகையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத, செடி முளைக்கும் விதை விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள், நீர் நிலைகளில் கரைக்கப்படுகின்றன. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்ற வேதிப்பொருளால் தயாரிக்கப்படும் சிலைகள், நீரில் கரையாமல் மிதப்பதால், சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுகிறது. இந்நிலையில், இயற்கையை பாதுகாக்கும் வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த, விநாயகர் சிலைகளை, சேலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தயாரித்துள்ளனர். களிமண், இயற்கை உரம், விதைகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த விநாயகரை கரைத்தால், செடி முளைத்து, மரமாக வளரும்.

சேலம் மாவட்டம், ஆத்துாரைச் சேர்ந்த பாலசந்தர், 30, என்பவர் கூறியதாவது: பிற மாநிலங்களில், சுற்றுச்சூழலுக்கு உகந்த விதை விநாயகர் தயாரிப்பதை அறிந்து, அதேபோல, உருவாக்க முயற்சி எடுத்துள்ளோம். இயற்கை உரம், விதை போன்றவற்றை சேகரித்து, பெங்களூருக்கு அனுப்பி, அங்கு சிலை உருவாக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழா நிறைவுற்றதும், வழக்கமாக, நீர் நிலைகளில் கரைப்பதற்கு பதிலாக, வீட்டில் மண் நிரப்பிய தொட்டியில், சிலையை வைத்து, தண்ணீர் ஊற்ற வேண்டும். சிலை கரைந்து, ஒரு சில நாட்களில் செடி முளைக்கும். செடி பெரியதாக வளர்ந்தவுடன், மண் சட்டியுடன் புதைத்து விட்டால், மரமாகி வளரும். இதனால், சுற்றுச்சூழலுக்கு கெடுதல் இல்லை. தமிழகத்தில், முதல் முறையாக, இந்த முயற்சியை எடுத்துள்ளோம். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில், இந்த விதை விநாயகர் விற்பனையை துவக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: மாடூர் டோல்கேட் அருகே நிறைமதி சாலையில் உள்ள பஞ்சமுக மஞ்சள் வாராஹி அம்மன் கோவிலில், ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார், கூத்தப்பாக்கம் சர்வசக்தி விநாயகர் கோவிலில் முதலாமாண்டு பூர்த்தி சிறப்பு பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar