திருப்புத்துார் காளியம்மன் கோயிலில் முருகன் சிலை பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஆக 2018 11:08
திருப்புத்தூர்: திருப்புத்துார் காளியம்மன் கோயிலில் அமைந்துள்ள முருகன் கோயிலில் நேற்றுசுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை உற்ஸவர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. முருகன் கோயிலுக்கு ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் முருகன், வள்ளி, தெய்வானை சமேத உற்சவ ஐம்பொன் சிலைகள் செய்யப்பட்டது. முருகன் சன்னதி முன்பாக உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டு நேற்று காலை 7:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கின. பிள்ளையார்பட்டி பாடசாலை சிவாச்சார்யர்கள் பூஜைகளை நடத்தினர். கலசங்களுக்கும் பூஜைகள் நடந்தன. அடுத்து உற்ஸவர் சிலைகளுக்கு அபிஷேகம் நடந்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் சன்னதிக்குள் உற்சவர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.