பச்சரிசி - 400 கிராம் வெல்லம் - 200 கிராம் தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
எப்படி செய்வது: பாசிப்பருப்பை அரைவேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும். அரிசியை களைந்து ஊற வைத்து உலர்த்தி மெஷினில் அரைத்து வறுத்து சலித்துக் கொள்ளவும். வெல்லத்தை தூள் செய்து சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். மாவுடன், தேங்காய்த் துருவல், பாசிப்பருப்பு, வெல்லக் கரைசலை சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவைக் கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லி போல் ஆவியில் வேக வைக்க விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை தயாராகி விடும். வக்ர துண்டர், மகோத்ரதர், கஜானனர், லம்போதரர், விகடர், விக்னராஜர், தூம்ரவர்ணர், சூர்ப்பகர்ணர் என்னும் எட்டு அவதாரங்கள் விநாயகர் எடுத்ததாக விநாயகர்புராணம் கூறுகிறது.