திருவாரூர் - மன்னார்குடி சாலையில் திருவாரூரிலிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் உள்ளது தேவர் கண்ட நல்லூர் பெத்தாரணயேஸ்வரர் கோயில். மகாவிஷ்ணு பெத்தாரண சுவாமியாகக் காட்சி அளிக்கிறார். உத்தண்டராயர், காமாட்சியம்மன், மதுரைவீரர், தூண்டில்காரர், பரமநாயகி, வாகையாடி மூர்த்தி போன்ற தெய்வங்களுக்கு தனி தனி சன்னதிகள் உள்ளன. கோயிலின் வாசலில் வழியுரான் சுவாமி காப்பாளராக கம்பீரமாக காட்சி அளிக்கிறார். இக்கோயிலின் முக்கிய சன்னதிகளில் ஒன்று பெரிய நாயகி அம்மன். இந்த அம்மனை வழிபடும் பக்தர்களுக்கு எம பயம் நீங்குகிறது. குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு இந்த அம்மனின் அருளால் குழந்தைப்பேறு கிடைப்பதாகக் கூறப்படுகிறது.