பதிவு செய்த நாள்
10
அக்
2018
11:10
பழநி: பழநி முருகன்கோயில் மற்றும் உபகோயில்களில் நவராத்திரி விழா நேற்று காப்புக்கட்டுதலுடன் துவங்கி அக்., 19 வரை நடக்கிறது.பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் காலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, காப்புக்கட்டுதல் நடந்தது. திருஆவினன்குடிகோயிலிலும், மலைக்கோயில் உச்சிகாலபூஜையில் சண்முகர், வள்ளி, தெய்வானை மற்றும் துவார பாலகர்களுக்கும் காப்புக்கட்டினர்.
இதேபோல போகர் ஜீவசமாதியில் காப்புகட்டி, புவனேஸ்வரியம்மன் அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்திற்கு எழுந்தருளினார்.விழாநாட்களில் பெரியநாயகியம்மன் கோயிலில் தினமும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகிறது. முக்கிய நிகழ்ச்சியாக அக்,,19ல் அம்பு, வில் போட்டு மகிஷாசூரன்வதம் நடக்கிறது.
அன்று மலைக்கோயிலில் மாலை 5.30 மணி சாயரட்சைபூஜை முன்னதாக பகல் 1.30மணிக்கு செய்து, பகல் 2.30 மணிக்குமேல் மலைக்கோயிலிருந்து பராசக்திவேல் புறப்பட்டு பெரியநாயகியம்மன் கோயிலுக்கு கொண்டு செல்கின்றனர். அங்கிருந்து பராசக்தி வேலுடன் தங்ககுதிரைவாகனத்தில் முத்துக்குமாரசுவாமி கோதைமங்கலம் சென்று, அங்குள்ள சிவன்கோயிலில் அம்புபோட்டு, மகிஷாசூரன் வதம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொ) செந்தில் குமார் செய்கின்றனர்.---