Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் நவராத்திரி விழா துவக்கம்: ... ஐயப்பனுக்கும், தமிழகத்துக்கும் குடும்ப பந்தம் ஐயப்பனுக்கும், தமிழகத்துக்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரியில் கடை வீதியில் தேங்கி நிற்கும் மழைநீர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவதி
எழுத்தின் அளவு:
புதுச்சேரியில் கடை வீதியில் தேங்கி நிற்கும் மழைநீர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவதி

பதிவு செய்த நாள்

10 அக்
2018
11:10

புதுச்சேரி:வடிகால் அனைத்திலும் அடைப்பு ஏற்பட்டதால், புதுச்சேரியின் முக்கிய கடை வீதியில், ஒரு வாரமாக தண்ணீர் வடியாமல் தேங்கியுள்ளது.புதுச்சேரியில் பிரெஞ்ச் ஆட்சிக் காலத்தில், மழை நீர் வடிய வடிகால்கள் வடிவமைக்கப்பட்டன. பல நாட்கள் இடைவிடாது மழை பெய்தாலும், நகர பகுதிகளில் அதற்கான சுவடே தெரியாத அளவில் தண்ணீர் வடிந்து விடும். ஆனால், காலப்போக்கில் வடிகால்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், முறையாக பராமரிக் கப்படாமல், தூர்ந்து விட்டதாலும், தண்ணீர் வடிய வழியில்லாமல், பிரதான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் குளமாக தேங்கிவிடுகிறது.புதுச்சேரியில், கடந்த 3ம் தேதி, சில மணி நேரம் மழை பெய்ததில், இந்திரா காந்தி சிக்னல், வழுதாவூர் சாலை, புஸ்சி வீதி, இ.சி.ஆர்., சிவாஜி சிலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளும் தப்ப வில்லை. மழை பெய்து ஒரு வாரம் ஆகியும், நகரின் மையப்பகுதியும் முக்கிய வியாபார இடங்கள் அமைந்துள்ள சின்ன சுப்ராயபிள்ளை வீதியில், தண்ணீர் வடியாமல் குளமாக தேங்கியுள்ளது. அந்த பகுதியில் இருந்து வடிகால்கள் அத்தனையும் அடைப்பு ஏற்பட்டதே இந்த நிலைக்கு காரணம். தண்ணீர் தேங்கி நிற்பதால், அந்த வீதியில் அமைந்துள்ள அங்காளம் மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், கழிவுநீர் தேங்கிய சாலையில் நடந்துவரும் அவல நிலை உள்ளது.வியாபார நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.நகரின் முக்கிய சாலையில் இந்த அவல நிலை உள்ள நிலையில், இதுவரை தண்ணீரை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar