Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காளையார் கோவிலில் தைப்பூச தேரோட்டம் தென் திருப்பதி வெங்கடாஜலபதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுத்தமல்லி ஜெய்மாருதி கோயில் ராஜகோபுர கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 பிப்
2012
02:02

திருநெல்வேலி :சுத்தமல்லி ஜெய்மாருதி கோயிலில் ராஜகோபுர அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது. சுத்தமல்லி விலக்கு கோபாலசமுத்திரம் ரோடு ஜெய்மாருதி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 27 நட்சத்திரத்தை குறிப்பிடும் வகையில் 27 அடி உயரத்திலும், 12 லக்னத்தை குறிப்பிடும் வகையில் 12 அடி அனுமன் சிலையும், 9 கோள்களை குறிக்கும் வகையில் 9 அனுமன் சிலைகளுடன் 3 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கோபுரத்தில் ராமபிரானின் பட்டாபிஷேக திருக்கோலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ராமஜெயம் பொறிக்கப்பட்டுள்ள செங்கற்களால் கோபுரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. கோடி ராமஜெயம் எழுதப்பட்டு அவையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 4ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. 5ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் துவங்கி நடந்துவந்தது. காலை 9.20 மணிக்கு மீன லக்னத்தில் விமான கும்பாபிஷேகம், சுவாமி ஜெய்மாருதி, மகா கணபதி, தஜபுஜ காளி மற்றும் பரிவார தேவதைகளுக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை ஜெய்மாருதிதாசன் நாராயணன் குழுவினர் நடத்தினர். மதியம் மகேஸ்வர பூஜை, அன்னதானமும், பிரசன்ன பூஜை, தீபாராதனை நடந்தது. சுத்தமல்லி பஞ்., தலைவர் பிரம்மநாயகம், ஏ.எல்.என். விஜயலெட்சுமி, தொழிலதிபர் சங்கர், ரமாசங்கர், நாராயணசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆலய ஸ்தாபகர் ஜெய்மாருதி தாசன், நாராயணன், திருப்பணிக்குழு தலைவர் பாண்டியன் மற்றும் தர்ம சேவா டிரஸ்ட் பக்தர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேகவதி ஆற்றங்கரையோரம், 16ம் நுாற்றாண்டின் விஜயநகரப் பேரரசு கால சதிகல் சிற்பம் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், மங்கள வேல் வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பல்லி சிலைகள் மாற்ற முயற்சி நடப்பதாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால் சிற்பங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar