காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கோவில்களில், மொரீஷியஸ் நாட்டு அதிபர், பரமசிவம் பிள்ளை வையாபுரி நேற்று தரிசனம் செய்தார்.அரசு முறை பயணமாக, காஞ்சிபுரம் வந்த மொரீஷியஸ் நாட்டு அதிபர், பரமசிவம் பிள்ளை வையாபுரி நேற்று காலை, 11:00 மணிக்கு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றார். அவருக்கு, கோவில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அம்மனை தரிசனம் செய்த பின், அங்கிருந்து ஏகாம்பரநாதர் கோவில் மற்றும் குமரகோட்டம் முருகன் கோவிலுக்கு சென்றார். மாலையில் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்திற்கு சென்று பார்வையிட்டார்.அதை தொடர்ந்து, காஞ்சி சங்கர மடத்திற்கு சென்றார். மாலை, 5:00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு புதுச்சேரி சென்றார்.