Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தீர்த்தீஸ்வரர் கோவிலில் நவராத்திரி ... குருவித்துறை கோவிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு குருவித்துறை கோவிலில் ஐம்பொன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலை கோவில் சிலைகள் மாயம் பெண் அதிகாரியிடம் விசாரணை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2018
01:10

 சென்னை:மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், மூன்று சிலைகள் மாயமானது தொடர்பாக, அறநிலையத் துறை கூடுதல் கமிஷனர், திருமகளிடம், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். சென்னை, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில்,  2004ல், கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி நடந்த போது, புன்னைவனநாதர், ராகு, கேது ஆகிய, மூன்று சிலைகள் மாயமாகின. அந்த சிலைகள் மாற்றப்பட்டதாகவும், அவை கடத்தப்பட்டு, விற்பனை செய்யப்பட்டதாகவும், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை தொடர்ந்து, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், விசாரணையை துவக்கினர். சில தினங்களுக்கு முன், கபாலீஸ்வரர் கோவிலில் சோதனை நடத்தினர்.  அப்போது, சிலைகள் மாற்றப்பட்டு, வேறு சிலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. பின், அறநிலையத்துறையின் ஆஸ்தான ஸ்தபதி முத்தையாவிடம், விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில், 2004ல், கோவிலில் நிர்வாக அதிகாரியாக இருந்தவருக்கும், பல முக்கிய பிரமுகர்களுக்கும், சிலைகள் மாயமானதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து, 2004ல், அறநிலையத் துறை இணை கமிஷனராக இருந்தவரும், தற்போது, கூடுதல்  கமிஷனராக உள்ளவருமான, திருமகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சென்னை, வியாசர்பாடி, கலைஞர் நகர், 6வது தெருவில் வசிக்கும், கூடுதல் கமிஷனர் திருமகள் வீட்டில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, கூடுதல் எஸ்.பி., அசோக் நடராஜன்,  டி.எஸ்.பி., குமார் தலைமையிலான போலீசார், இரண்டு பெண் போலீசார் உதவியுடன், நேற்று காலை, 11:30 மணி முதல், 12:00 மணி வரை விசாரணை நடத்தினர். சிலைகள் பதுக்கப்பட்டுள்ளதா; வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டதா என, அவரிடம் பல கேள்விகள்  கேட்கப்பட்டுள்ளன.இந்த விவகாரத்தில், பல முக்கிய நபர்களுக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டதால், கூடுதல் கமிஷனர் திருமகளிடம், மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 தீபாவளி பண்டியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
 திண்டிவனம்: தீபாவளியை முன்னிட்டு, திண்டிவனத்தில் பெண்கள் கேதார கவுரி நோன்பு எடுத்து வழிப்பட்டனர். ... மேலும்
 
temple news
 விழுப்புரம்: விழுப்புரம் மழுக்கரமேந்திய அமைச்சார் அம்மன் கோவிலில் பக்தர்கள் சதுர்தசி நோன்பு ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: செம்பொற்சோதிநாதர் கோவிலில் மூலவர் சுவாமி வெள்ளி கலச நாக ஆபரணம் அலங்காரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar