பதிவு செய்த நாள்
15
அக்
2018
12:10
பனமரத்துப்பட்டி: பூசாரி போட்ட பூட்டை உடைத்த மக்கள், அம்மன் கோவிலை திறந்து, பூஜை செய்து வழிபட்டனர்.சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி, நாழிக்கல்பட்டியில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் துர்க்கையம்மன் கோவில் உள்ளது.
கோவில் நிலம் தொடர்பாக, பூசாரி மற்றும் கோவில் நிர்வாகிகள் இடையே பிரச்னை எழுந்தது. கோவில் நிர்வாகிகள், வேறு ஒரு பூசாரியை வைத்து, பூஜை செய்து வந்தனர். கடந்த, 12ல், பூசாரி தரப்பினர் கோவிலை பூட்டினர். இது குறித்து இரு தரப்பினரும், மல்லூர் போலீசில் புகராளித் தனர். நேற்று (அக்., 14ல்), கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர், பூசாரி பூட்டிய கோவிலை திறக்க வலியுறுத்தி, போலீஸ் ஸ்டேஷனில் திரண்டனர். பூசாரி தரப்பினர் வராததால், போலீசார்விசாரிக்கவில்லை.ஆவேசமடைந்த மக்கள், கோவிலுக்கு சென்று, பூசாரி போட்ட மூன்று பூட்டுகளையும் அறுத்து எடுத்து, கோவிலை திறந்து, பூஜை செய்து, அம்மனை வழிபட்டனர்.