பதிவு செய்த நாள்
25
அக்
2018
02:10
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உள்ள, 22 நிரந்தர உண்டியல்கள் மற்றும் ஒன்பது தட்டு காணிக்கை உண்டியல்கள் நேற்று (அக்.,24ல்) திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.நிரந்தர உண்டியல்களில், 30 லட்சத்து, 72 ஆயிரத்து, 974 ரூபாய்; தட்டு காணிக்கை உண்டியல்களில், ஒன்பது லட்சத்து, 95 ஆயிரத்து, 54 ரூபாய் காணிக்கை இருந்தது. மேலும், 244 கிராம் தங்கம் மற்றும், 953 கிராம் வெள்ளி இருந்தது. கோவில் உதவி ஆணையர் ஆனந்த் பொள்ளாச்சி ஆய்வர் மல்லிகா முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது. கோவில் கண்காணிப்பாளர் தமிழ்வாணன், புலவர் லோகநாதன், திருக்கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.