பகவத் கீதையை தீபாவளியின் தம்பி என்று குறிப்பிடுவது வழக்கம். தியாகத்தாய் சத்தியபாமா மகனை இழந்த நிலையில், பகவான் கிருஷ்ணரிடம் அந்நாளை பண்டிகையாக கொண்டாட வரம் பெற்றதால் பண்டிகைகளின் ராஜாவாக தீபாவளி இருக்கிறது. தத்துவங்கள் பல இருந்தாலும் அதற்கெல்லாம் சிகரமாக இருப்பது பகவத்கீதை. தீபாவளி போல இதுவும் தியாகத்தின் பின்னணியில் உருவானதே. சாதாரணமாக தத்துவ உபதேசம் என்பது குருநாதர் தன் சீடர்களுக்கு செய்வதாக இருக்கும். ஆனால் கீதையோ நெருக்கடியான சூழலில் போர்க்களத்தில் பிறந்தது. எஜமானராக இருக்கும் அர்ஜுனன், வண்டிக்காரனாக தேரோட்டும் சாரதியிடம் கேட்ட உபதேசம்.
“சிஷ்யனாக சரணாகதி அடைந்த எனக்கு உபதேசம் செய்வாயாக” என அர்ஜுனன் கேட்ட போது பகவத்கீதை பிறந்தது. இதனால் கீதை தீபாவளியின் தம்பி என்ற அந்தஸ்து பெறுகிறது. பண்டிகைகளில் ராஜா தீபாவளி போல் தத்துவங்களில் கீதை உயர்ந்ததாக உள்ளது. தீபாவளி, கீதைக்கு காரணகர்த்தாவாக இருப்பவர் பகவான் கிருஷ்ணரே. - சொல்கிறார் காஞ்சிப்பெரியவர்