Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காவிக்கு இல்லை கட்டுப்பாடு நல் வாழ்வு தரும் பொன் மொழிகள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கருணை மனம் வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 நவ
2018
02:11

அப்துல்லாவுக்கு இறைவன் மீது அபார பக்தி. மனைவியை இழந்த அவர், இறைவனைப் பழித்துப் பேசினால் கோபப்படுவார்.  ஒருநாள் மழை பெய்தது. பிச்சைக்காரர் ஒருவர் நனைந்தபடியே அப்துல்லாவின் வீட்டு வாசலில் நின்று பிச்சை கேட்டார். “ஐயா! நனையாதீர்கள்; உள்ளே வாருங்கள், உணவளிக்கிறேன்” என்றார். தயங்கிய பிச்சைக்காரரின்  கையை பிடித்து அழைத்து வந்து உணவு பரிமாறினார் அப்துல்லா. பசியில் இருந்த அவர் வேகமாக சாப்பிட ஆரம்பித்தார். அப்துல்லா அவரைத் தடுத்ததோடு, “பசியில் தவித்த உங்களுக்கு உணவளித்த இறைவனுக்கு நன்றி சொல்லாமல் சாப்பிடுவது தவறல்லவா..”  என்றார்.

“எனக்கு உணவளித்தது நீங்கள் தான். இறைவன் அல்ல! வேண்டுமானால் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்றார் பிச்சைக்காரர். அப்துல்லாவுக்கு கோபம் எழுந்தது. இறைவனுக்கு நன்றி சொன்ன பிறகே சாப்பிட வேண்டும் என மீண்டும் வற்புறுத்தியும் கூட அவர் ஏற்கவில்லை.  “அப்படியானால்... என் வீட்டில் சாப்பிட அனுமதியில்லை” என சப்தமிட பிச்சைக்காரர் புறப்பட்டார். வருத்தமுடன் அன்றிரவு தூங்கினார் அப்துல்லா. அவரின் கனவில் “பசியோடு வந்தவரை சாப்பிட விடாமல் விரட்டினாயே... அது சரியா” எனக் கேட்டார் இறைவன்.  “அவர் உங்களை நம்ப மறுத்தார். நன்றியும் சொல்லவில்லை. அதனால் விரட்டினேன்” என்றார். “இன்று நேற்றல்ல... 70 ஆண்டுகளாக அவர் என்னை மறுத்தே வருகிறார். ஆனாலும் நான் பொறுமையுடன் உணவளித்து வருகிறேன்.  ஒரே இரவில் கோபப்பட்டு நீ துரத்தி விட்டாயே” என்றார். கனவு கலைந்த அப்துல்லா விழித்தார். அளவற்ற கருணை கொண்ட கடவுள் போல நாமும் இனி எல்லா உயிர்களிடமும் கருணை காட்ட வேண்டும் என முடிவு செய்தார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar