Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்தர்கள் வெள்ளத்தில் ... திருத்தணி முருகன் கோவிலில் புஷ்பாஞ்சலி விழா திருத்தணி முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கந்தசஷ்டி திருவிழா: மருதமலையில் சூரசம்ஹரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2018
11:11

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹரம் நேற்று நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பக்திபரவசமடைந்தனர்.

Default Image
Next News

கோவையின் முக்கிய ஸ்தலமாகவும், முருகப்பெருமானின் ஏழாம் படைவீடாகவும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், ஆண்டுதோறும், தைப்பூசத்திருவிழா மற்றும் கந்தசஷ்டி திருவிழா ஆகிய இரண்டு முக்கிய விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டு கந்தசஷ்டி திருவிழா, காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் கடந்த, 8ம் தேதி  துவங்கியது.   ஏழு நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழாவின் முதல் நாளில் இருந்து காலை, மாலை இருவேளையும் யாகசாலை பூஜை நடைபெற்றது. ஆறாம் நாளான நேற்று கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் நடந்தது. இதில், குதிரை வாகனத்தில் வந்த வீரபாகு, தாரகாசுரன், பானுகோபன், சிங்கமுகாசுரன், சூரபத்மன் ஆகியோரிடம் துாது சென்றார். அதன்பின், சுப்பிரமணி சுவாமி, சூரசம்ஹாரத்திற்காக பச்சை நாயகி அம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனையறிந்த சூரபத்மனன் மரமாக உருமாறி நின்றார். சுப்பிரமணிய சுவாமி வீரநடனத்துடன் சம்ஹாரத்திற்கு எழுந்தருளி, சூரபத்மன், பானுகோபன், சிங்கமுகாசுரன், தாரகாசுரனை வதம் செய்தார். பின், சுப்பிரமணிய சுவாமிக்கு வெற்றி வாகை சூடும் நிகழ்ச்சியும், முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு சாந்தாபிேஷகம், தீபாராதனைகள் செய்யப்பட்டது. சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, அரோகரா கோஷம் எழுப்பினர். கந்தசஷ்டி விழாவின்  ஏழாம் நாளான இன்று, காலை 8:30 மணிக்கு யாகசாலை கலசங்கள், மூலவருக்கு அபிேஷகமும், காலை 9:00 மணிக்கு வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணமும், திருவீதியுலாவும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு,பெருவுடயாருக்கு ஆயிரம் கிலோ அரிசி மற்றும் 500 ... மேலும்
 
temple news
அரியலூர் ; கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழாவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த  அன்னாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கேரள மாநிலம், பாலக்காடு கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலில் இன்று அன்னாபிஷேகம் வெகு ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar