முதுகுளத்தூர் காமாட்சியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2018 05:11
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே எஸ்.ஆர்.என் பழங்குளம், கீழப்பனையூர் கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நவ. 13ல் காலை மஹாகணபதி ஹோமம், மாலை முதல்கால யாக பூஜை, தீபாராதனைகள் நடந்தது. நேற்று (நவம்., 14ல்) இரண்டாம் கால பூஜை, லட்சுமி பூஜை சுவாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டது.
கோமாதா பூஜை நடத்தப்பட்டு, கருட வாகன புறப்பாட்டுக்கு பின் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.தலைவர் முத்து தலைமையிலும் செயலாளர் நாகசாமி, பொருளாளர் கோவிந்தராஜ், கோயில் பூசாரி ராமகிருஷ்ணன், முனியசாமி, முன்னிலை வகித்தனர். காமாட்சி அம்மனுக்கு அபிஷேகம் தீபாராதனைகள் நடந்தது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை எஸ்.ஆர். என். பழங்குளம் கீழப்பனையூர் விழா கமிட்டியினர். கிராம மக்கள் செய்திருந்தனர்.