திருநகர்: நவ. 16 -திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நடந்தது.சீர்வரிசை தட்டுக்கள் கொண்டு வரப்பட்டன. வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு சிறப்பு பூஜை முடிந்து திருக்கல்யாணமும், தொடர்ந்து தீபாராதனைகளும் நடந்தன.