பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2018 12:11
பண்ருட்டி:திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
அதனையொட்டி, நேற்று (நவம்., 15ல்) மாலை மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரிய நாயகி, விநாயகர், சுப்ரமணிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. உற்சவர் சுப்ரமணியர் வள்ளி, தெய் வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இதேபோன்று பண்ருட்டி சோமநாத சுவாமி கோவில் மற்றும் திருத்துறையூர் சிஷ்டகுருநாதர் கோவிலிலும் கந்தசஷ்டி விழா கொண்டாடப்பட்டது.