ரஷ்ய அறிஞர் டால்ஸ்டாய் நாயகம் பற்றி சொல்வதாவது: “அநாகரிகமாக மக்கள் வாழ்ந்த காலத்தில் அவர் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும், முரடர்களுக்கு கூட அகிம்சை, சகிப்புத்தன்மை, பொறுமை போன்ற நற்பண்புகளை கற்று தந்தது. அவர்களை உண்மையின் வழியில் இழுத்து சென்று வெற்றியை நிலை நாட்டிய பெருமை, வெறும் நாவினால் புகழக்கூடிய ஒன்றல்ல. அவர் ஒரு உண்மையான தீர்க்கதரிசி”டால்ஸ்டாய் இறந்த போது, அவரது சட்டைப்பையில் ’நபியின் பொன்மொழிகள்’ என்ற ஆங்கில நூல் இருந்தது.