பதிவு செய்த நாள்
22
நவ
2018
11:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளை, 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 14ல், தீப திருவிழா கொடியேற்றத்துன் தொடங்கியது. முக்கிய விழா, நாளை, ‘ஏகன் அனேகன்’ என்பதை விளக்கும் வகையில், அதிகாலை, 4:00 மணிக்கு சுவாமி கருவறை எதிரில் பரணி தீபமும், ‘அனேகன், ஏகன்’ என்பதை விளக்கும் வகையில், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
மஹா தீபம் ஏற்றப்பயன்படுத்தப்படும் கொப்பரை இன்று, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. மேலும், மஹா தீபம் ஏற்ற, 3,500 கிலோ நெய், 1,000மீட்டர் காடா துணியால் ஆன திரி தயார் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விழாவை முன்னிட்டு சுவாமி சன்னதி முழுவதும், பல்வேறு வண்ணங்களில், ஐந்து டன் ரோஜா, சாமந்தி, பூக்களால் தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக உள்ளது.