கொட்டும் மழையில் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட மஹா தீப கொப்பரை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22நவ 2018 01:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கொட்டும் மழையில், மஹா தீப கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் கொண்டாடப்படும் தீப திருவிழாவில் நாளை(நவ.23ல்) மாலை மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதை முன்னிட்டு, அதிகாலை 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு. அருணாசலேசுவரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர், 150 கிலோ எடை, ஐந்து அடி உயரம் கொண்ட மஹா தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி கோஷத்துடன் 2,668 அடி உயர மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. மலை உச்சிக்கு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கோவில் ஊழியர்கள், தீப கொப்பரை எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டனர். காலை முதல் தொடர்ந்து மழை பெய்ததால், மலை ஏறும் பாதையில் பாறைகளில் ஏற பணியாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.