Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருத்தணி அம்மன் கோவில்களில் நாளை ... திருத்தணி முருகன் கோவிலுக்கு யானை கொண்டு வராதது ஏன்? திருத்தணி முருகன் கோவிலுக்கு யானை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2018
04:11

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று (நவம்., 23ல்) நடந்த கிருத்திகை விழா மற்றும் மகா தீபத் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், காவடிகளுடன்
குவிந்தனர்.

திருத்தணி முருகன் மலைக் கோவிலில், நேற்று (நவம்., 23ல்), கார்த்திகை மாத கிருத்திகை விழாவையொட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு பால், பன்னீர் விபூதி, பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால், சிறப்பு அபிஷேகம் நடந்தது.

காலை, 10:00 மணிக்கு, காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன், கோவில் நுழைவாயில் முன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, அங்கு வைக்கப்பட்ட சொக்கப்பனையில், நெய் தீபம் ஏற்றப்பட்டது.அதே நேரத்தில், கோவிலின் எதிரில் உள்ள, பச்சரிசி மலையில், பெரிய அகல்
விளக்கில், 300 கிலோ நெய், இரண்டரை அடி கனம், 10 மீ., நீளமுள்ள திரியில், மகா தீபம் ஏற்றப்பட்டது.

அப்போது, மலைக் கோவிலில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், அரோகரா, அரோகரா... என, பக்தி முழக்கமிட்டனர்.இந்த தீபத்தை பார்த்த பின், திருத்தணி நகரம் முழுவதும் வீடுகள் மற்றும் கடைகளில், நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.இரவு, 7:30 மணிக்கு, வெள்ளி மயில் வாகனத்தில், வள்ளி, தெய்வானையுடன், உற்சவ பெருமான் மாட வீதியில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பக்தர்கள், காவடிகளுடன் மலைக்கோவிலில் குவிந்து, பொது வழியில் இரண்டு மணி நேரம் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர்.நேற்று (நவம்., 23ல்) மழை இல்லாததால், பக்தர்கள் சிரமப்படாமல், சுவாமியை தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar