கண்டாச்சிபுரம் அருகே பாலேஸ்வரர் கோவிலில் சோமவார பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27நவ 2018 02:11
கண்டாச்சிபுரம்: சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில் சோமவார பூஜை நடைபெற்றன.கெடார் அடுத்த சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில், நேற்று (நவம்., 26ல்) சோமவார பூஜை நடைபெற்றன.
காலை 11 மணிக்கு 1008 லலிதா சகஸ்ரநாமம் பூஜையும், அதனைத்தொடர்ந்து உச்சிகால பூஜையில், பக்தர்கள் பங்குபெற்ற வாழைப்பூ கலச வழிபாடு மற்றும் மூலவர் பாலேஸ்வரர் மற்றும் பாலாம்பிகை அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு நன்னீர் தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது.