பழநியில் காத்திருந்த பக்தர்கள் ஏறிக்குதிப்பதால் ஆபத்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2018 11:12
பழநி: சபரிமலை சீசன், கார்த்திகையை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் 3 மணிநேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர். சபரிமலை சீசன், தைப்பூச விழா வருகையை முன்னிட்டு பழநி மலைக்கோயிலுக்கு கேரளா, ஆந்திரா போன்ற வெளிமாநிலத்தவர்கள் மற்றும் பாதயாத்திரை பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். நேற்று மாத கார்த்திகை, பிரதோஷத்தை முன்னிட்டு மலைக்கோயிலில் அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் பால்குடங்கள், காவடி எடுத்து வந்தனர். ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்தனர். மலைக்கோயில் பொதுதரிசனம் வழியில் மூன்று மணிநேரம் வரை காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். இதேபோல தங்கரதப்புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.ஏறி குதிப்போருக்கு ஆபத்து குறுக்குவழியில் செல்வதற்காக ரூ.20 கட்டண தரிசன வழியில் சில பக்தர்கள் ஆபத்தான முறையில் கட்டை சாரத்தில் ஏறி குதித்து உள்ளே செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. செக்யூரிட்டிகள் இவர்களை கண்காணித்து தடுக்க வேண்டும்.