நாமக்கல்: நாமக்கல், சக்தி கணபதி கோவிலில் ஆண்டு விழா நடந்தது. நாமக்கல், ஏ.எஸ்., பேட்டை சக்தி கணபதி கோவிலில், நேற்று 5ல், 26ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அதிகாலை, 5:00 மணிக்கு மோகனூர் காவிரி ஆற்றிலிருந்து, தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. 9:00 மணிக்கு கணபதி பூஜை மற்றும் யாகம்; 10:00 மணிக்கு, 108 வலம்புரி சங்கு ஹோமம்; 10:30 மணிக்கு கணபதிக்கு அபிஷேகம்; 108 வலம்புரி சங்கு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.
மதியம், 12:05 மணிக்கு அன்னதானம், மாலை, 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனை வருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.