Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோயிலில் தேங்காய் உடைப்பது ஏன்? நிறம் மாறிய பூக்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
செல்வ வளம் அருளும் காங்கேயன் தரிசனம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
03:02

முருகப்பெருமானின் திருப்பெயர்களில் ஒன்று காங்கேயன். கங்கையின் மைந்தன் எனும் பொருளில் அமைந்தது. இதற்கு வேறொரு காரணமும் உண்டு. சூரபதுமனின் மைந்தர்களில் ஒருவன் இரண்யன் (திருமால் அழித்த இரண்யாட்சன், இரண்யகசிபு ஆகியோர் வேறு.) கடலுக்கடியில் வசித்த இந்த அசுரனிடமிருந்து தேவர்களைக் காக்க திருவுளம் கொண்ட முருகப்பெருமான், நெடிய வில்லையும் அம்பையும் ஏந்தியபடி போர்க்கோலம் கொண்டு கடற்கரையை அடைந்தார். அங்கே நீர்ப்பரப்பில் மகர மீனாக மேலெழுந்து வந்தான் அசுரன். அக்கணமே, முருகப்பெருமான் எய்த அஸ்திரம் அவனது ஆணவத்தை அழித்தது. மகர வடிவுடன் வந்து முருகனின் தாள்களைப் பணிந்தான்.

அவனை வாகனமாக ஏற்றுக்கொண்டார் முருகப்பெருமான். மகர வாகனத்தில் பவனி வரும் முருகனை காங்கேயன் எனப்போற்றுவர். இந்தத் திருவடிவில் நீலோற்பவம், தீயகலாகிய பந்தம், பூரணக்கும்பம் ஏந்தியவராகத் திகழ்கிறார் முருகன். கங்கு என்றால் சிறிய ஜ்வாலையுடன் கனன்றுகொண்டிருக்கும் நெருப்பு. உலகையே அழிக்கவல்ல வடவைக் கனலாகவும் திகழும். இந்தக் கங்கினை எளிய தீப்பந்தமாக்கி ஏந்தியிருப்பதால் முருகனுக்குக் காங்கேயன் எனப்பெயர். இவரை வழிபட்டால் வறுமைப்பிணி நீங்கும்; செல்வம் செழிக்கும் என்கின்றன ஞானநூல்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தினமும் வெவ்வேறு வாகனத்தில் செல்வதற்காக ஐந்து பைக், இரண்டு கார் வாங்கினார் ஜான். தன் வீட்டையும் ... மேலும்
 

அன்பாக இரு ஏப்ரல் 09,2026

* பெற்றோர், மனைவி, குழந்தைகள் மீது அன்பாக இரு.  * அநியாயம் செய்தால் துன்பமே பரிசாக கிடைக்கும்.* தியாகம் ... மேலும்
 

துணிவே துணை ஏப்ரல் 09,2026

பல நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளும் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க விரும்பினான் ஒரு இளைஞன். அது ... மேலும்
 
ஞானி ஒருவரைச் சந்திக்க ஒட்டகத்தில் புறப்பட்டான் மாலிக். நீண்ட துாரம் பயணம் செய்து அவர் இருக்கும் ... மேலும்
 

முயற்சி செய் ஏப்ரல் 09,2026

* எதுவும் தானாக நடக்காது. முயற்சி செய்தால் தான் நடக்கும்.  * இன்று செய்யும் நன்மை நாளை பலனைத் தரும்.* ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar