Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே ... குரு சோதனை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனசை கட்டிப் போடுங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
04:02

ஒரு இளைஞனுக்கு மகானாக வேண்டும்என்ற ஆசை எழுந்தது. என்ன செய்தால் மகான் ஆகலாம் என யோசித்தான். நண்பர்களிடம் யோசனை கேட்டு பார்த்தான். அவர்கள் கேலி செய்தார்களே தவிர வழி சொல்வதாகத் தெரியவில்லை. எதற்கு வம்பு? ஒரு மகானிடமே கேட்டுவிட்டால், தன் கேள்விக்கு பதில் கிடைத்து விடுமென ஒரு சிறந்த மகானை நாடிப் போனான். காவியும், பட்டையுமாய் அமர்ந்திருந்த அவரிடம், “சுவாமி! உங்களை மகான் என்று ஊரே புகழ்கிறது. உங்களது இந்த நிலைக்கு காரணம் என்ன?” என்று கேட்டான். “உண்கிறேன், உறங்குகிறேன், தியானம் செய்கிறேன்,” என்றார் அவர். இளைஞன் சிரித்து விட்டான். “ஏன் சாமி! இதைத்தான் ஊரில் எல்லாரும் செய்கிறார்களே! அப்படியானால் எல்லாரும் மகான் தானா?” என்று சற்று நையாண்டியை குரலில் குழைத்துக் கேட்டான்.


“தம்பி! எல்லாரும் அதைத் தான் செய்கிறார்கள். ஆனால், நான் உண்ணும் போதும், உறங்கும் போதும், தியானம் செய்யும் போதும் அதை மட்டுமே செய்கிறேன். மற்றதை பற்றி நினைப்பதில்லை. மனதை அந்தச் செயலில் மட்டுமே நிலைப்படுத்துகிறேன். ஆனால், சாதாரண மனிதர்கள் ஒன்றைச் செய்யும் போது, மற்றதில் மனதைத்

திருப்புகிறார்கள். அதுதான் அவர்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்,” என்றார். இப்போது தான் இளைஞனுக்குப் புரிந்தது. மனதை ஒருநிலைப்படுத்தி ஒன்றைச் செய்தால் தான் மகானாக முடியுமென்று!  இப்போது புரிந்து கொண்டீர்களா! மனதை ஒருநிலைப்படுத்தி செய்யும் ஒவ்வொரு செயலும் வெற்றியடையுமென்று!

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar