பிப்., 16ல் சென்னை குரோம்பேட்டை, நன்மங்கலத்தில் சங்கராபுரம் ஸ்ரீ மஹாபெரியவா சத்சங்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2019 02:02
பிப்ரவரி 16 குரோம்பேட்டையிலும் மற்றும் 17 அன்று நன்மங்கலத்திலும் மாயவரம் தாலுகாவை சார்ந்த கூத்தனூரின் வனதுர்கா கோவிலருகில் உருவாகி கொண்டு வரும் சங்கராபுரம் என்கிற நூதன வேத கிராமத்தை பற்றிய சத்சங்கம் நடைபெறும் .இந்த சத்சங்க நிகழ்ச்சியில் சென்னை நங்கநல்லூரில் பெரியவா கிரஹத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மஹா பெரியவா பிரதமை ஆன்மீக அன்பர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு சகல பூஜராதனைகளும் நடைபெறும்.
பிறகு மாயவரம் அருகில் கூத்தனூர் என்ற கிராமத்தனருகில் உருவாகி கொண்டு வரும் சங்கராபுரம் என்ற நூதன வேத கிராமத்தைப்பற்றி ஸ்ரீ வைஷ்ணவி டிரஸ்டின் மேனேஜிங் டைரக்டர் ஸ்ரீ .கி.வெங்கடசுப்ரமணியன் வழங்கும் விளக்க உரையும் நடைபெறும். இரு தினங்களும் மாலை 5.30 முதல் 8 .30 வரை கீழே குறிப்பிட்ட இடங்களில் சத்சங்கம் நடக்கவிருக்கிறது.