பதிவு செய்த நாள்
15
பிப்
2019
11:02
ஆத்தூர்: ஆத்தூர், அக்ரஹாரம், வரசித்தி விநாயகர் கோவில் வளாகத்தில், சத்குரு ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளது. அதன் கும்பாபிஷேகம், கடந்த ஆக., 29ல் நடந்தது. தொடர்ந்து, வியாழன்தோறும் பாபாவுக்கு, ஆராதனை, சிறப்பு பூஜை நடந்து வருகிறது. நேற்று, சாய்பாபாவுக்கு வேள்வி பூஜை செய்து, மலர் அலங்காரத்தில் பாபா அருள்பாலித்தார். தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், பொதுத்தேர்வு எழுதவுள்ள, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியர் வெற்றி பெறவேண்டி, பெற்றோர் வழிபட்டனர்.
அன்னதானம்: வாழப்பாடி அருகே, மன்னாய்க்கன்பட்டியில், ஷீரடி சாய்பாபா கோவில் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. அங்கு, வியாழன்தோறும் சிறப்பு பூஜை, அன்னதானம் வழங்கப்படுகிறது. அதன்படி, நேற்று மதியம், 1:00 மணிக்கு, சாய்பாபாவின் திருவுருவ சிலை, படத்துக்கு மாலையணிவித்து பூஜை நடத்தி, அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல், வாழப்பாடி, கடலூர் பிரதான சாலை அருகே, போலீஸ் ஸ்டஷேன் முன்புறம், சாய் விருக்ஷா அறக்கட்டளை சார்பில், பாபாவின் படத்துக்கு மாலையணிவித்து சிறப்பு பூஜை நடந்தது.