பதிவு செய்த நாள்
16
பிப்
2019
12:02
தி.நகர்: தியாக பிரம்ம கான சபா சார்பில், தியாகராஜர் ஆராதனை நிகழ்ச்சி, துவங்கியது. சென்னை, தி.நகர் வாணி மஹாலில், தியாக பிரம்ம கான சபா சார்பில், தியாகராஜர் ஆராதனை நிகழ்ச்சியின் துவக்க விழா, நேற்று நடந்தது.தமிழக இசை மற்றும் கவின் பல்கலை துணை வேந்தர், பிரமிளா குருமூர்த்தி, குத்துவிளக்கு ஏற்றி, விழாவை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி, 20ம் தேதி வரை நடக்கும். விழாவில், ஓபுல் ரெட்டி ஞானாம்பாள் டிரஸ்ட் வழங்கிய, தியாக பிரம்ம நாத விபூஷன் விருது மற்றும் 1.5 லட்சம் ரூபாய் நிதி, மிருதங்க கலைஞர், உமையாள்புரம், டாக்டர், சிவராமனுக்கு வழங்கப்பட்டது.விழாவில், பிரமிளா குருமூர்த்தி பேசியதாவது:சிவ, விஷ்ணு பேதமின்றி, தியாகராஜர் பாடல்களை பாடி உள்ளார்.
உமையாள்புரம், வாலாஜாப்பேட்டை, பிள்ளைஸ்தானம் என, தியாகராஜருக்கு, மூன்று சீடர் பரம்பரை உள்ளது.உமையாள்புரம் சிவராமன், மிருதங்கம் குறித்து ஆராய்ச்சி செய்து, நுால்கள் வெளியிட்டுள்ளார். இது, பாராட்டத்தக்கது.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், இசைப் போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.