கிருஷ்ணராயபுரம் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2019 04:02
கிருஷ்ணராயபுரம்: மகாதானபுரம் அக்ரஹாரத்தில், பாஷ்யம் சமஸ்கிருத, உறைவிடப் பள்ளி புதுப்பித்துக்கட்டப்பட்டு, தரைத்தள கட்டடத்தில் புதுமணை புகுதல் மற்றும் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, சேலம் உடையாம்பட்டி காந்தாஸ்ரமத்தை சேர்ந்த பூஜ்ய ஸ்ரீ சுவாமி சாந்தாநந்த பாரதி தலைமை வகித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை, பாஷ்யம் காப்பாளர் மகாதானரபுரம் ராஜாராம், தென்னக சமஸ்கிருத பாரதி தலைவர் அனந்த கல்யாண கிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜன், வட தமிழக சம்ஸ்கிருத பாரதி தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு சம்ஸ்கிருத உறைவிடப் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.