பதிவு செய்த நாள்
18
பிப்
2019
04:02
கரூர்: க.பரமத்தி அருகே, செல்லாண்டியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. க.பரமத்தி அருகே, ஆரியூரில், பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இதில் கடந்த, 11ல், கிராம சாந்தி பூஜையுடன் மஹா கும்பாபிஷேக விழா துவங்கியது. 13ல், கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் தீர்த்தக் குடம் எடுத்து வந்தனர். அதன் பின், ஐந்து யாக சாலை பூஜைகள் நேற்று முன்தினம் (பிப்., 16ல்) வரை நடந்தன. நேற்று (பிப்., 17ல்) காலை, 5:00 மணி முதல், ஆறாம் யாகசாலை பூஜை, மூலமந்திர ஹோமங்களை தொடர்ந்து, 9:30 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கர், எஸ்.பி., ராஜசேகரன், டி.ஆர்.ஓ., சூர்ய பிரகாஷ், திருச்சி கோட்ட பா.ஜ., இணை பொறுப்பாளர் சிவசாமி உள்பட, பலர் விழாவில் பங்கேற்றனர்.