ஏழரைச் சனி, அஷ்டம,அர்த்தாஷ்டம சனிமற்றும் சனி தசைநடப்பவர்கள், சனீஸ்வரருக்குஎள் எண்ணெய் தீபம் ஏற்றி, சந்நிதி முன்அமர்ந்து, இந்தக் கவசத்தைப் பாராயணம் செய்தால், துன்பம் குறைந்து இன்பம் அடையலாம்.
கருநிறக் காகம் ஏறிகாசினி தன்னைக் காக்கும்ஒரு பெரும் கிரகமான ஒப்பற்ற சனியே! உந்தன்அருள் கேட்டு வணங்குகின்றேன்!ஆதரித் தெம்மை காப்பாய்!பொருளோடு பொன்னை அள்ளிபூவுலகில் எமக்குத் தாராய்!
ஏழரைச் சனியாய் வந்தும்எட்டினில் இடம் பிடித்தும்கோளாறு நான்கில் தந்தும்கொண்டதோர் கண்ட கத்தில் ஏழினில் நின்ற போதும்இன்னல்கள் தாரா வண்ணம்ஞாலத்தில் எம்மைக் காக்கநம்பியே தொழுகின்றேன் நான்!
பன்னிரு ராசி கட்கும்பாரினில் நன்மை கிட்டஎண்ணிய எண்ணம் எல்லாம்ஈடேறி வழிகள் காட்ட எண்ணெய்யில் குளிக்கும் நல்லஈசனே உனைத் துதித்தேன்!புண்ணியம் எனக்கு தந்தேபுகழ் கூட்ட வேண்டும் நீயே!
கருப்பினில் ஆடை ஏற்றாய்காகத்தில் ஏறி நின்றாய்இரும்பினை உலோகமாக்கிஎள் தனில் பிரியம் வைத்தாய்! அரும்பினில் நீல வண்ணம்அணிவித்தால் மகிழ்ச்சி கொள்வாய்பெரும் பொருள் வழங்கும் ஈசாபேரருள் தருக நீயே!
குளிகனை மகனாய்ப் பெற்றாய்குறைகளை அகல வைப்பாய்எழிலான சூரியன் உன்இணையற்ற தந்தை யாவார்! விழி பார்த்து பிடித்துக் கொள்வாய்விநாயகர் அனுமன் தன்னைத் தொழுதாலோ விலகிச் செல்வாய்துணையாகி அருளைத் தாராய்!
அன்ன தானத்தின் மீது அளவிலா பிரியம் வைத்தமன்னனே! சனியே! உன்னைமனதாரப் போற்றுகின்றோம்! உன்னையே சரணடைந்தோம்! உயர்வெல்லாம் எமக்குத் தந்தேமன்னர் போல் வாழ்வதற்கேமணியான வழி வகுப்பாய்!
மந்தனாம் காரி நீலாமணியான மகர வாசா!தந்ததோர் கவசம் கேட்டேசனி என்னும் எங்கள் ஈசா!வந்திடும் துயரம் நீக்குவாழ்வினை வசந்தம் ஆக்கு!எந்த நாள் வந்த போதும் இனிய நாள் ஆக மாற்று!