பதிவு செய்த நாள்
16
மார்
2019
02:03
ஓசூர்: ஒன்னகுறிக்கி கிராமத்தில் நடந்த, நாகமுனேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, ஜெக்கேரி அடுத்த ஒன்னகுறிக்கி கிராமத்தில் உள்ள நாகமுனேஸ்வர சுவாமி கோவில் தேர்த்திருவிழா, நேற்று முன்தினம் (மார்ச்., 14ல்) துவங்கியது. நேற்று (மார்ச்., 15ல்) காலை, 9:00 மணிக்கு ரதோஸ்சவ பூஜை மற்றும் மதியம், 12:30 மணிக்கு தேரோட்டம் நடந்தது.
அலங்கரிக்கப்பட்ட தேரில், நாகமுனேஸ்வர சுவாமி உற்சவ மூர்த்தி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மாலையில் நிலையை அடைந்தது. இன்று (மார்ச்., 16ல்) காலை, 11:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், பூ அலங்கார சேவை மற்றும் இரவில் பல்லக்கு உற்வசம் நடக்கிறது.