ஒருமுறை திருஞானசம்பந்தர் மதுரையில் தங்கியிருந்தபோது, சமணர்கள் பலர் சிவ பக்தர்களாக மாறினர். இதை அறிந்த சமணத் துறவிகள் சிலர், மதுரை மன்னரான கூன்பாண்டியனிடம் முறையிட்டனர். ”சிறுவனான ஞானசம்பந்தனைக் கண்டதால் தங்களுக்கு ’கண்டுமுட்டு’ (தீமையைக் கண்டால் ஏற்படும் தோஷம்) வந்ததாகச் சொல்லி வருந்தினர்.
தனக்கு ’கேட்டுமுட்டு’ (தீமையைக் கேட்டதால் ஏற்படும் தோஷம்) ஏற்பட்டதாக மன்னர் வருந்தினார். வெப்பு நோயால் பாதிக்கப்பட்ட மன்னர், மனம் திருந்தி ஞானசம்பந்தரை சரணடைந்தார். ’மந்திரமாவது நீறு’ என்னும் பதிகம் பாடிய ஞானசம்பந்தர் நோயைப் போக்கியதோடு, மன்னரின் வளைந்த முதுகையும் நேராக்கி ’நின்றசீர் நெடுமாறன்’ என மாற்றினார். சிவபக்தரான இந்த மன்னர் பின்னர், நாயன்மார் வரிசையில் இடம் பெற்றார்.