பொருள்: என்னை நிலையானவன் என்றும், அழியாதவன் என்றும் அறிந்த நல்லவர்கள், தெய்வீக இயல்பு கொண்டவர்கள், பெரியவர்கள் வேறு விஷயங்களில் கவனம் செலுத்தாமல் முழுமனதுடன் பக்தியில் ஈடுபடுகிறார்கள். மன உறுதி கொண்ட இவர்கள் எப்போதும் என்னுடைய திருநாமங்களையும், குணங்களையும் பாடி இசைத்துக் கொண்டும், என்னை அடையும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். மனதில் என்னை தியானித்தபடி பக்தியில் நிலைத்திருக்கின்றனர்.